கரை அதன் காதல் கேளாமல் நங்கூரத்தை கழற்றி விட்டு நகர்ந்தது ஆழ் கடலுக்குள் பாய் மரப் படகு நங்கூரம் இருக்கும் ந(நி )னைந்து நிறம் மாறும் பொழுது அனைத்தும் ஒரு கனவு விடியலில் இன்னுமொரு படகு
நானாக சிரித்தாலும் நயமாக நடந்தாலும் நிலவோடு நிற்கின்றேன் நில்லாமல் அலைகின்றேன் புது முல்லை வெள்ளை வயலோரம் பல தென்னை வழி நெடுக ஓடும் வாத்து வலது கண்ணாடி பிம்பம் வண்ணம் காட்டும் சாரல் சொல்லாமல் போனதெல்லாம் உன்னோடு மட்டுமில்லை என்னோடும் இடி மழையே அதை அவளோடு விட்டு வைத்தேன் கனவோடு காத்திருப்பேன்
இதுகாளும் கதவுகளை திறந்து வைத்தேன் தென்றல் வீசியது திங்கள் வரை இப்போது வெள்ளி முளைக்க கொஞ்சம் மூடி வைத்தேன் அதனருகே நின்று கொண்டேன் தட்டும் ஒலி கேட்டால் திறந்து கொள்ளும் அடுத்த திங்கள் வரை